செய்திகள்

அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 31-ந் தேதி நடக்கிறது

Published On 2017-05-24 22:54 IST   |   Update On 2017-05-24 22:55:00 IST
அரியலூர் மாவட்ட "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்'' வருகிற 31.05.2017 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்'' வருகிற  31.05.2017 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News