செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்: 4 வாலிபர்கள் கைது

Published On 2017-04-27 07:09 GMT   |   Update On 2017-04-27 07:09 GMT
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த சாலபோகம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த மனோகர், ராகவேந்திரன், குமரவேல் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆற்று படுகையில் இருந்து லாரி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதேபகுதியைச் சேர்ந்த பிரகாசை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

Similar News