செய்திகள்

ஆலந்தூரில் பொது கழிப்பிடத்தில் தொழிலாளி குத்தி கொலை

Published On 2017-04-17 12:26 IST   |   Update On 2017-04-17 12:26:00 IST
ஆலந்தூரில் பொது கழிப்பிடத்தில் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

செங்கல்பட்டை சேர்ந்தவர் வேலு (வயது 44). ஆலந்தூர் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்தர்.

நேற்று இரவு அவர் ஆலந்தூர், எம்.கே.என்.சாலை மடுவிங்கரை பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தில் கத்தி குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதைக்காக குராம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேலுவை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான மர்ம வாலிபர் ஒருவர் செல்வது பதிவாகி இருந்தது.

இதனை வைத்து வாலிபர் ஒருவரை பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News