செய்திகள்
கீரனூர் அருகே டிராக்டரின் கதவு விழுந்ததால் கூலித்தொழிலாளி பலி
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது டிராக்டரில் மூடப்பட்டிருந்த இரும்பு கதவு விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கீரனூர்:
கீரனூர் அருகே உள்ள தாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 34) கூலித்தொழிலாளி. இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ஓரு ஆண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் குளத்தூரில் உள்ள தனது மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மாங்குடியை நோக்கி ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிராக்டரை கடந்து சென்ற போது டிராக்டரில் மூடப்பட்டிருந்த இரும்பு கதவு திறந்து முருகேசனின் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
டிராக்டரை அதே இடத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர் அருகே உள்ள தாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 34) கூலித்தொழிலாளி. இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ஓரு ஆண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் குளத்தூரில் உள்ள தனது மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மாங்குடியை நோக்கி ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிராக்டரை கடந்து சென்ற போது டிராக்டரில் மூடப்பட்டிருந்த இரும்பு கதவு திறந்து முருகேசனின் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
டிராக்டரை அதே இடத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.