செய்திகள்

களக்காடு அருகே ஆசிட் ஊற்றி 1350 வாழைகள் அழிப்பு: 2 பேர் கைது

Published On 2017-03-16 15:01 GMT   |   Update On 2017-03-16 15:01 GMT
களக்காடு அருகே விவசாயிக்கு சொந்தமான 1350 வாழைகளை ஆசிட் ஊற்றி அழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலவடகரையை சேர்ந்தவர் கணேசன் (வயது37). விவசாயி. இவருக்கு சொந்தமான வாழைதோட்டம் அப்பகுதியில் உள்ளது. சம்பவத்தன்று இந்த தோட்டத்திற்குள் புகுந்த  மர்ம நபர்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த 1350 வாழைகள் மீது ஆசிட் ஊற்றி அழித்தனர்.

இச்சம்பவம் குறித்து கணேசன் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பசுபதி (67), பண்டாரம் ஆகியோர் சேர்ந்து கணேசன் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை அழித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News