செய்திகள்

மன்னார்குடி அருகே பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

Published On 2017-03-16 12:35 GMT   |   Update On 2017-03-16 12:35 GMT
மன்னார்குடி அருகே பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை தலையாமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே உள்ள நெம்மேலி நெட்டிக்குளத்தை சேர்ந்தவர் மாதன் (வயது 23), டிராக்டர் டிரைவர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, வாழப்பட்டியை சேர்ந்த துரை (23), நெல் அறுவடை மி‌ஷன் கிளீனர்.

இவர்கள் தலையாமங்கலம் அருகே பஸ் நிறுத்தமில்லாத இடத்தில் அரசு பஸ்சை நிறுத்தும்படி சைகை செய்தனர். அதனை டிரைவர் பொருட்படுத்தாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த இருவரும் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News