செய்திகள்

சென்னிமலையில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

Published On 2017-03-07 17:22 IST   |   Update On 2017-03-07 17:22:00 IST
சென்னிமலையில் நேற்று ஒரு மணிநேரம் பெய்த மழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னிமலை:

சென்னிமலை பகுதியில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெயில் இருந்தது. பகல் நேரத்தில் வெளியில் செல்ல பொதுமக்கள் அஞ்சினர். பல இடங்களில் மரங்கள் கூட நீர் இன்றி வாடியது.

இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரம் பெய்தது.

இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து மழை பெய்தததை மகிழ்ச்சியுடன் பரிமாறி கொண்டனர். தற்போதுள்ள கடும் வறட்சிக்கு இந்த மழை பற்றாக்குறை தான்.

தொடர்ந்து மழை பெய்யுமா? என மக்கள் எதிர் பார்ப்புடன் உள்ளனர்.

Similar News