செய்திகள்
ஈரோடு நகைக்கடை அதிபர் தற்கொலை: போலீசார் விசாரணை
ஈரோட்டில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் நகைக்கடை அதிபர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடி காவோ சிட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவரது மனைவி தனலட்சுமி (28).இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
கார்த்திக் ஈரோடு பிரப் ரோட்டில் நகை கடை வைத்து நடத்தி வந்தார். தனலட்சுமி ஈரோட்டில் சிக்கன் சென்டர் நடத்தி வந்தார்.
கார்த்திக் நடத்தி வந்த நகை கடையில் சரியாக வியாபாரம் ஆகாமல் நஷ்டமானதாக கூறப்படுகிறது. மேலும் கடன் பிரச்சனையும் ஏற்பட்டது.
இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் கார்த்திக் நேற்று நகை கடையில் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் கிடைத்தவுடன் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அடுத்த வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடி காவோ சிட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவரது மனைவி தனலட்சுமி (28).இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
கார்த்திக் ஈரோடு பிரப் ரோட்டில் நகை கடை வைத்து நடத்தி வந்தார். தனலட்சுமி ஈரோட்டில் சிக்கன் சென்டர் நடத்தி வந்தார்.
கார்த்திக் நடத்தி வந்த நகை கடையில் சரியாக வியாபாரம் ஆகாமல் நஷ்டமானதாக கூறப்படுகிறது. மேலும் கடன் பிரச்சனையும் ஏற்பட்டது.
இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் கார்த்திக் நேற்று நகை கடையில் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் கிடைத்தவுடன் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.