செய்திகள்
அம்மாபேட்டை பகுதியில் 3 மணி நேரம் கொட்டிய மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
அம்மாபேட்டை பகுதியில் 3 மணி நேரம் கொட்டிய பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் சில இடங்களில் இதமான மற்றும் கனமான மழை கொட்டியது.
அம்மாபேட்டையில் நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென மழை பெய்தது. லேசாக பெய்த இந்த மழை போக போக இடி-மின்னலுடன் பலமாக கொட்டியது. நள்ளிரவு 12.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 2.30 மணி வரை பெய்தது.
மேலும் தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் பெய்யத் தொடங்கிய மழை 4.30 மணி வரை பெய்தது. மொத்தம் 3 மணி பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரோட்டின் இரு புறமும் அருவி போல் தண்ணீர் பாய்ந்து ஓடியது. வயல் பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பியது.
அம்மாபேட்டை, நெரிஞ்சி பேட்டை, சிங்கம்பேட்டை, சித்தார், காடப்ப நல்லூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் பெய்த இந்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அம்மாபேட்டை பகுதியில் மட்டும் ஒரே நாள் இரவில் 162 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மழை குறித்து அம்மாபேட்டை பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஒரே நாளில் எங்கள் மனதை இந்த பலத்த மழை குளிர வைத்துவிட்டது’’ என்று கூறினர்.
இடி-மின்னலுடன் 3 மணி நேரம் பெய்த இந்த மழையால் அம்மாபேட்டை பகுதியில் மின்சாரம் தடைபட்டது. நேற்று நள்ளிரவு 11.45 மணிக்கு தடைபட்ட மின்சாரம் இன்று காலை 9 மணி வரை வரவில்லை. இதனால் மக்கள் தூங்காமல் தவித்தனர். எனினும் பலத்த மழையால் அதை மறந்தனர்.
மேலும் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் 5 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பெரும்பள்ளம் அணை, ஓலப்பாளையம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் சில இடங்களில் இதமான மற்றும் கனமான மழை கொட்டியது.
அம்மாபேட்டையில் நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென மழை பெய்தது. லேசாக பெய்த இந்த மழை போக போக இடி-மின்னலுடன் பலமாக கொட்டியது. நள்ளிரவு 12.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 2.30 மணி வரை பெய்தது.
மேலும் தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் பெய்யத் தொடங்கிய மழை 4.30 மணி வரை பெய்தது. மொத்தம் 3 மணி பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரோட்டின் இரு புறமும் அருவி போல் தண்ணீர் பாய்ந்து ஓடியது. வயல் பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பியது.
அம்மாபேட்டை, நெரிஞ்சி பேட்டை, சிங்கம்பேட்டை, சித்தார், காடப்ப நல்லூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் பெய்த இந்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அம்மாபேட்டை பகுதியில் மட்டும் ஒரே நாள் இரவில் 162 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மழை குறித்து அம்மாபேட்டை பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஒரே நாளில் எங்கள் மனதை இந்த பலத்த மழை குளிர வைத்துவிட்டது’’ என்று கூறினர்.
இடி-மின்னலுடன் 3 மணி நேரம் பெய்த இந்த மழையால் அம்மாபேட்டை பகுதியில் மின்சாரம் தடைபட்டது. நேற்று நள்ளிரவு 11.45 மணிக்கு தடைபட்ட மின்சாரம் இன்று காலை 9 மணி வரை வரவில்லை. இதனால் மக்கள் தூங்காமல் தவித்தனர். எனினும் பலத்த மழையால் அதை மறந்தனர்.
மேலும் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் 5 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பெரும்பள்ளம் அணை, ஓலப்பாளையம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.