செய்திகள்

மாமல்லபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு

Published On 2017-02-20 09:30 GMT   |   Update On 2017-02-20 09:30 GMT
மாமல்லபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்:

மால்லபுரத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் ஸ்தலசயண பெருமாள் கோவில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை அலங்காநல்லூரில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை லாரியில் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மல்லை இந்து பாரம்பரிய கலாச்சார பாதுகாப்பு சங்கம் துவக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாமல்லபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி காஞ்சீபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Similar News