செய்திகள்

ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு

Published On 2017-02-08 13:29 GMT   |   Update On 2017-02-08 13:29 GMT
ஊத்தங்கரை தொகுதி சட்ட மன்ற உறுப்பினரான மனோரஞ்சிதம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை:

பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே அ.தி.மு.க. தலைமை இன்று காலை கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 131 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

முதல்வர் பன்னீர் செல்வம் தவிர்த்து அதிமுகவில் மொத்தம் 134 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். ஏற்கனவே கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி, சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் ஆகிய 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தனர். 

இந்நிலையில், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு வெளிப்படையாக இதுவரை 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் தமக்கு ஆதரிப்பார்கள் என்று பன்னீர்செல்வம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News