செய்திகள்
மலரவன்

அ.தி.மு.க.வுக்கு தீபாவை தலைமை ஏற்க வைப்போம்: முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் ஆவேச பேச்சு

Published On 2017-02-08 10:40 IST   |   Update On 2017-02-08 10:56:00 IST
அ.தி.மு.க.வுக்கு தீபாவை தலைமை ஏற்க வைப்போம், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றியே தீருவோம் என முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் பேசியுள்ளார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய ஜெ.தீபா பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான மலரவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபா தலைமையில் அ.தி.மு.க. வினர் ஒன்று திரள வேண்டும்.

இதன் மூலம் இரட்டை இலை சின்னத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கைப்பற்றியே தீருவோம். 30 வருடத்துக்கு மேலாக அம்மாவுடன் இருந்தாராம் சசிகலா. அதனால் அவர் தான் முதல்வர் ஆக வேண்டும். என்கிறார்கள். ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது. தமிழக முதல்- அமைச்சராக சசிகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை. அவரை மட்டுமல்ல அவரது கூட்டத்தையும் விரட்டியடிப்போம்.

தீபா விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரை நாம் எழுச்சியுடன் வரவேற்க வேண்டும். புரட்சிதலைவிக்கு பிறகு நாங்கள் உங்கள் பக்கம் தான் என்று நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு மலரவன் கூறினார்.

Similar News