செய்திகள்

கோபி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2017-02-06 20:38 IST   |   Update On 2017-02-06 20:38:00 IST
கோபி அருகே பனை மரத்தில் ஏறி பதனீர் இறக்கி கொண்டு இருந்த தொழிலாளி எதிர்பாராத தவறி விழுந்தார்.இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு:

கோபியை அடுத்த கடுக்காம்பாளையம், வஞ்சி மூப்பன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது55). பனை மரம் ஏறும் தொழிலாளி.

சம்பவத்தன்று பழனிசாமி கடுக்காம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பனை மரத்தில் ஏறி பதனீர் இறக்கி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் பழனிசாமி பனை மரத்தில் தவறி கீழே விழுந்தார்.

இதில் பழனிசாமிக்கு பின் பக்க தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்கிசிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் பழனிசாமியை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News