செய்திகள்
சிறுவலூர் அருகே இளம்பெண் கடத்தப்பட்டாரா? தந்தை போலீசில் புகார்
சிறுவலூர் அருகே வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென காணவில்லை. இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
கோபி:
சிறுவலூர் அருகே உள்ள கடுக்காம் பாளையம் புளியங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜான் மெர்சி.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜான் மொசியை திடீர் என்று காணவில்லை. அவரை பல இடங்களில்தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தொயவில்லை.
இது பற்றி ஜான் மெர்சியின் தந்தை பெருமாள் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் காணாமல் போன தனது மகள் ஜான் மெர்சியை ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள ராஜ கோபால் என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் எனவே தனது மகளை மீட்டு கொடுக்கும்படியும் கூறி உள்ளார்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஜான் மெர்சியையும், அவரை கடத்தியதாக கூறப்படும் ராஜகோபாலையும் தேடி வருகிறார்கள்.