செய்திகள்

சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2017-02-04 21:39 IST   |   Update On 2017-02-04 21:39:00 IST
சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே உள்ள அய்யப்பம் பாளைம் சத்ய சாய் நகரை சேர்ந்தவர் குமரேசன். (வயது 28). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மகேஷ் (24), கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் வீட்டில் யாரும் இல்லாததால் குமரேசன் தினமும் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலையும் குமரேசன் தனது வீட்டை பூட்டி விட்டு  வேலைக்கு சென்று விட்டார். பிறகு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் உள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 3 பவுன் நகையையும் காணவில்லை.

குமரேசன் தினமும் தனது வீட்டை பூட்டி விட்டு செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரது வீட்டில் பட்டப்பகலில் திருடி உள்ளது போலீஸ் விசராணையில் தெரியவந்தது.

இது பற்றி  சத்தியமங்கலம் போலீசில் குமரேசன் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன் வீட்டில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Similar News