செய்திகள்

கடம்பூர் அருகே மான் வேட்டையாடிய 4 பேர் கைது

Published On 2017-01-25 13:43 IST   |   Update On 2017-01-25 13:43:00 IST
கடம்பூர் அருகேயுள்ள குன்றி வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய நான்கு பேரை கைது செய்து தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
டி.என்.பாளையம்:

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ளகுன்றி வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய நான்கு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

டி.என்.பாளையம் வனச்சரகர் சிவசுப்ரமணியம் தலைமையில் வனத்துறையினர் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தொட்டிமடுவு என்ற இடத்தில் 2பேர் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.அந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். துருவிதுருவி விசாரித்ததில் கடமானை சுருக்கு கம்பிவைத்து வேட்டையாடியது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் குன்றியை சேர்ந்த பெருமாள்(25) சின்ராஜ்(24) எனத் தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2பேர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிந்தது. பிறகு வனத்துறையின் அதிரடி வேட்டையில் அந்த 2 பேரும் பிடிபட்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கிட்டான் (27), பூமாதன் (31) என தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து சுருக்கு கம்பியை பறிமுதல் செய்து, இறந்து போன கடமானை சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் அசோகன் வரவழைக்கப்பட்டு பிரேதப்பரிசோதனை செய்து அங்கேயே புதைக்கப்பட்டது. வேட்டையாடிய நான்கு பேருக்கு தலா ரூ.50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News