செய்திகள்
அந்தியூர் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி வாலிபர் தற்கொலை
அந்தியூர் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி வாலிபர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம் பாளையத்தில் ரோட்டோரத்தில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த வழியாக நடந்து சென்ற 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் திடீரென அந்த டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.
அடுத்த கனம் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகி பலியானார். பலியான அவரது உடல் டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அந்தியூர் போலீசார் விரைந்தனர். மேலும் பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜானகிராமனும் சென்றார்.
இதற்கிடையே டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதால் பருவாச்சி, குன்னம் தளவாய் பேட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதனால் டிரான்ஸ்பார்மரில் தொங்கிய வாலிபர் உடலை உடனடியாக மீட்க போலீசார் முனைந்தனர். இதையொட்டி போலீஸ் டி.எஸ்.பி ஜானகிராமன் அந்தியூர் தீயணைப்பு நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தார்.
ஆனால் அவர்கள் யாரும் உடனடியாக வராததால் போலீசார் பொது மக்கள் துணையுடன் டிரான்ஸ்பார்மரில் தொங்கிய வாலிபர் உடலை மீட்டனர். பிறகு அந்த வாலிபரது உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம் பாளையத்தில் ரோட்டோரத்தில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த வழியாக நடந்து சென்ற 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் திடீரென அந்த டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.
அடுத்த கனம் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகி பலியானார். பலியான அவரது உடல் டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அந்தியூர் போலீசார் விரைந்தனர். மேலும் பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜானகிராமனும் சென்றார்.
இதற்கிடையே டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதால் பருவாச்சி, குன்னம் தளவாய் பேட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதனால் டிரான்ஸ்பார்மரில் தொங்கிய வாலிபர் உடலை உடனடியாக மீட்க போலீசார் முனைந்தனர். இதையொட்டி போலீஸ் டி.எஸ்.பி ஜானகிராமன் அந்தியூர் தீயணைப்பு நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தார்.
ஆனால் அவர்கள் யாரும் உடனடியாக வராததால் போலீசார் பொது மக்கள் துணையுடன் டிரான்ஸ்பார்மரில் தொங்கிய வாலிபர் உடலை மீட்டனர். பிறகு அந்த வாலிபரது உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.