செய்திகள்
பேராவூரணி அருகே மது பாட்டில் விற்றவர் கைது
பேராவூரணி அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
பேராவூரணி:
பேராவூரணி அருகே நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50), இவர் கொண்றைக்காடு ஆற்றங்கரையோரம் மதுபாட்டில் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து பேராவூரணி போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு மது விற்ற ரவிச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.