செய்திகள்

ஈரோட்டு பாலகாட்டூரில் முகத்தை சிதைத்து வாலிபர் கொலை

Published On 2017-01-11 17:25 IST   |   Update On 2017-01-11 17:25:00 IST
ஈரோட்டு பாலகாட்டூரில் முகம் சிதைந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு

ஈரோடு அக்ரஹாரத்தை அடுத்த பவானி ரோடு பாலகாட்டூர் பஸ்நிறுத்தம் அருகில் உள்ள விவசாய விளைநிலத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரிவில்லை. இறந்தவரின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவரது மூக்கு பகுதியில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது.

முன்விரோதம் காரணமாக அவரை யாராவது வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக விவசாய விளை நிலத்தில் கொண்டு வந்து பிணத்தை போட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இறந்து கிடந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சித்தோடுபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News