செய்திகள்

சிவகிரி அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-01-11 15:06 IST   |   Update On 2017-01-11 15:06:00 IST
சிவகிரி அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த தாண்டாம் பாளையம், அரிசன காலனியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி சரோஜா(வயது 30). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் 2 வருடங்களுக்கு முன்பு வீரன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். அதன் பிறகு சரோஜா தனது பாட்டி வீட்டிற்கு மகனுடன் சென்று தங்கி கூலிவேலை பார்த்து வந்தார். கணவர் இறந்ததில் இருந்து சரோஜா மனவேதனையுடன் இருந்துள்ளார். அவரது பாட்டி ஆறுதல் கூறிவந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரோஜா மண்ணெண்ணெய் தன் உடல் மீது ஊற்றி கொண்டு தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சரோஜாவை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தந்தை, தாய் இறந்தது கூடதெரியாமல் 6 வயது மகன் விளையாடி கொண்டிருந்தது பார்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

Similar News