செய்திகள்

நெல்லிக்குப்பத்தில் தீபாவுக்கு ஆதரவாக பேனர்

Published On 2017-01-04 16:15 IST   |   Update On 2017-01-04 16:15:00 IST
நெல்லிக்குப்பம் அருகே தீபாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் நேற்று பேனர் வைத்தனர். அதில் அ.தி.மு.க.வின் தலைமை ஏற்க தீபா வரவேண்டும் என்று குறிப்பட்டுள்ளனர்.

நெல்லிக்குப்பம்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க.பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றதை வரவேற்று 6 இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பேனர்களை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மமனிதர்கள் கிழித்து எடுத்து சென்று விட்டனர்.

இந்தநிலையில் நெல்லிக்குப்பம் அண்ணாசிலை அருகே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் நேற்று பேனர் வைத்தனர். அதில் அ.தி.மு.க.வின் தலைமை ஏற்க தீபா வரவேண்டும் என்று குறிப்பட்டுள்ளனர்.

தீபாவுக்கு ஆதரவாக பேனர் வைக்கப்பட்டுள்ளதால். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News