செய்திகள்

கழிவறையில் தூக்குபோட்டு மில் தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-01-02 16:38 IST   |   Update On 2017-01-02 16:38:00 IST
மொடச்சூர் அருகே கழிவறையில் மில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரச்சலூர்:

கடலூர் மாவட்டம் விளக்கப்பாடி, கிழக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது18).இவர் ஈரோடு மாவட்டம் மொடச்சூர் அடுத்த எழுமாத்தூரில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இவரது அறையில் திருவண்ணாமலை மாவட்டம் முனுக்கப்பட்டு, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமிபதி என்பவரும் தங்கி அதே மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று லட்சுமிபதி தனது அறைக்கு வந்த போது லட்சுமணன் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது லட்சமிபதி “நான் இரவு பணிக்கு சென்று வருகிறேன் நீ வெளியே செல்ல வேண்டாம்” என்று லட்சுமனணிடம் கூறிவிட்டு சென்று விட்டார்.

லட்சுமிபதி வேலையை முடித்து மறுநாள் காலை தனது அறைக்கு வந்தார். அங்கு லட்சுமணன் இல்லை. இதனால் லட்சுமணனை பல்வேறு இடங்களில் தேடினார்.ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அதே ஸ்பின்னிங் மில்லில் தங்கி வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்பவர் அங்குள்ள கழிப்பறைக்கு சென்ற போது அங்கு லட்சுமணன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News