செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி மலை கிராமங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சத்தியமங்கலம் வனப்பகுதி தலமலை அருகே உள்ள ராமரணை என்ற மலை கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, “மலை கிராமத்தில் சந்தேகப்படும்படி திரியும் நபர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் இதர பிரிவுகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுக்க தொடர்ந்து வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து கண்காணித்து வருகிறார்கள். இதற்கு உங்களது ஒத்துழைப்பும் அவசியம் என்று கூறினார்.
முகாமில் 17 குடும்பத்தினருக்கு 2 போர்வைகள் மற்றும் சில்வர் குடங்கள் வழங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் நக்சல் சிறப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி மலை கிராமங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சத்தியமங்கலம் வனப்பகுதி தலமலை அருகே உள்ள ராமரணை என்ற மலை கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, “மலை கிராமத்தில் சந்தேகப்படும்படி திரியும் நபர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் இதர பிரிவுகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுக்க தொடர்ந்து வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து கண்காணித்து வருகிறார்கள். இதற்கு உங்களது ஒத்துழைப்பும் அவசியம் என்று கூறினார்.
முகாமில் 17 குடும்பத்தினருக்கு 2 போர்வைகள் மற்றும் சில்வர் குடங்கள் வழங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் நக்சல் சிறப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர்.