செய்திகள்

பவானி அருகே நள்ளிரவில் பழக்கடை தீப்பிடித்து எரிந்தது

Published On 2016-12-30 22:34 IST   |   Update On 2016-12-30 22:34:00 IST
பவானி அருகே நள்ளிரவில் பழக்கடை தீப்பிடித்து எரிந்தது. இதில் கடைக்குள் தூங்கியவர் உயிர் தப்பினார்.

ஈரோடு:

பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை ஜீவா நகரில் பழக்கடை நடத்தி வருபவர் மாய கிருஷ்ணன். இவர் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

அப்போது நள்ளிரவில் கடையில் தீப்பிடித்தது. அப்போது காற்று அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பிடித்து எரிந்தது.

இந்த கடையினுள் மாய கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் படுத்து தூங்கினார். இவர் கடையில் தீப்பிடித்து எரிவதை பார்த்து வேகமாக வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினார்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

இது பற்றி தககவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு போக்குவரத்து பிரிவு அதிகாரி ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இதனால் பக்கத்தில் உள்ள கடைகள் தீ விபத்தில் இருந்து தப்பியது.

Similar News