செய்திகள்
விருத்தாசலத்தில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறிய ஸ்கேன் சென்டருக்கு சீல்
விருத்தாசலத்தில் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறிய ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ்நிலையத்தின் பின்புறம் தனியார் ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு ஸ்கேன் வசதி உள்ளது. ஸ்கேன் வசதியை பயன்படுத்தி கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பாலினத்தை கண்டறிந்து கூறி வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையொட்டி சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் குருநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மவர்மன் முன்னிலையில் ஸ்கேன் சென்டரை ஆய்வு செய்தார்.
அப்போது அந்த ஸ்கேன் சென்டரில் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆய்வின் போது மாநில பாலின தேர்வு தடைச்சட்ட அலுவலக கண்காணிப்பாளர் கமல கண்ணன், கடலூர் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மாதவி, விருத்தாசலம் அரசு மருத்துவனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சாமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
சுகாதாரத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ்நிலையத்தின் பின்புறம் தனியார் ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு ஸ்கேன் வசதி உள்ளது. ஸ்கேன் வசதியை பயன்படுத்தி கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பாலினத்தை கண்டறிந்து கூறி வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையொட்டி சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் குருநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மவர்மன் முன்னிலையில் ஸ்கேன் சென்டரை ஆய்வு செய்தார்.
அப்போது அந்த ஸ்கேன் சென்டரில் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆய்வின் போது மாநில பாலின தேர்வு தடைச்சட்ட அலுவலக கண்காணிப்பாளர் கமல கண்ணன், கடலூர் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மாதவி, விருத்தாசலம் அரசு மருத்துவனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சாமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
சுகாதாரத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.