செய்திகள்
சிதம்பரம் பல்கலைக்கழக பேராசிரியரை தாக்கிய மாணவர்
மோட்டார் சைக்கிளில் முந்திச்சென்றதை கண்டித்த சிதம்பரம் பல்கலைக்கழக பேராசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:
சிதம்பரம் மீதிகுடி ரோட்டைச் சேர்ந்தவர் சிதம்பரராஜா(வயது 52). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறையில் உதவி பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை வீட்டிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு மோட்டார் சைக்கிளிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் சந்தோஷ் குமார்(23) விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு மோட்டார் சைக்கிளிலில் வந்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் வந்தபோது சந்தோஷ் குமார் மிகவும் வேகமாக உதவி பேராசிரியர் சிதம்பரராஜாவின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்றதாக கூறப்படுகிறது.
சந்தோஷ்குமாரை உதவி பேராசிரியர் கண்டித்தார். இதனால் சந்தோஷ்குமார் ஆத்திரமடைந்து சிதம்பர ராஜாவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட சிதம்பரராஜா உடனடியாக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் மீதிகுடி ரோட்டைச் சேர்ந்தவர் சிதம்பரராஜா(வயது 52). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறையில் உதவி பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை வீட்டிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு மோட்டார் சைக்கிளிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் சந்தோஷ் குமார்(23) விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு மோட்டார் சைக்கிளிலில் வந்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் வந்தபோது சந்தோஷ் குமார் மிகவும் வேகமாக உதவி பேராசிரியர் சிதம்பரராஜாவின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்றதாக கூறப்படுகிறது.
சந்தோஷ்குமாரை உதவி பேராசிரியர் கண்டித்தார். இதனால் சந்தோஷ்குமார் ஆத்திரமடைந்து சிதம்பர ராஜாவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட சிதம்பரராஜா உடனடியாக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.