செய்திகள்

கருணாநிதி பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன்: வைகோ

Published On 2016-12-02 08:02 IST   |   Update On 2016-12-02 08:02:00 IST
கனிமொழியிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன் என்று வைகோ அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
ஆலந்தூர்:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் குன்றியதாக அறிந்ததும் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தேன். மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உடனே கனிமொழியிடம் கருணாநிதி பற்றி நலம் விசாரித்தேன். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “பொதுவுடைமை தலைவர் நல்லக்கண்ணு துணைவியார் மறைவுக்கும், கவிஞர் இன்குலாப் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”என்றார்.

Similar News