செய்திகள்

பொன்னமராவதி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

Published On 2016-12-01 21:45 IST   |   Update On 2016-12-01 21:46:00 IST
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் விவசாயின் கோழியை விழுங்கிய 10அடி நீள முள்ள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துள்ளனர்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் விவசாயின் கோழியை விழுங்கிய 10அடி நீள முள்ள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துள்ளனர்.

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் எல்லைக்காட்டில் குமார் என்ற விவசாயின் வீட்டின் முன்பு கோழியை விழுங்கிய நிலையில் ஒரு மலைப்பாம்பு கிடந்துள்ளது.

இதனைக்கண்டவர்கள் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு படையினர் சென்று கோழியை விழுங்கிய 10அடிநீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்துச்சென்றனர்.

Similar News