செய்திகள்

சாத்தான்குளம் அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை

Published On 2016-11-24 14:26 GMT   |   Update On 2016-11-24 14:27 GMT
சாத்தான்குளம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட வந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் திருநாமச்சந்திரன். இவரது மகள் திவ்யா (வயது16). இவர் இட்டமொழியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திவ்யா வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்றும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த திவ்யா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News