செய்திகள்

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவர் மாயம்

Published On 2016-11-24 13:40 GMT   |   Update On 2016-11-24 13:41 GMT
கோவையில் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவர் மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

கோவை:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பூரணி நகரை சேர்ந்தவர் கோகுல்(வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கலைஅறிவியல் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

இவர் தன்னுடன் படிக்கும் காந்தி புரத்தை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் கோகுலிடமும், அவரது காதலியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் பெற்றோருடன் செல்வதாக கூறி உள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று கோகுல் கல்லூரி செல்வதாக கூறிச் சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கோகுல் கிடைக்காததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோகுலை தேடி வருகின்றனர்.

Similar News