நாகை அருகே பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவர் கைது
நாகப்பட்டினம்:
நாகை அருகே தாழத்தெரு வாசல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பூவரசன் (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அப்போது அதே பகுதியில் தனியார் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் அவருக்கு அறிமுகம் ஆனார். அந்த மாணவியை பூவரசன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது காதலை மாணவியிடம் கூறியுள்ளார். அதனை அவர் மறுத்து பூவரசனிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று தனது தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை பூவரசன் கடத்தி சென்று அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து நாகப்பட்டினம் மகளிர் போலீசில் பூவரசன் மீது புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருபா வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.
நாகையில் 10-ம் வகுப்பு மாணவியை கல்லூரி மாணவர் கடத்தி சென்று முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.