செய்திகள்

மயிலாடுதுறையில் அருகே விபத்து: போலீஸ் ஏட்டு பலி

Published On 2016-11-22 15:37 IST   |   Update On 2016-11-22 15:37:00 IST
மயிலாடுதுறை அருகே விபத்தில் போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் போக்கு வரத்து காவல்துறை தலைமை காவலராக பணி புரிந்து வந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் மயிலாடுதுறை நீதிமன்றம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருநாவுக்கரசு நேற்று இரவு பணிமுடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் கச்சேரி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதி படுகாய மடைந்தார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்குபதிவு செய்து திருநாவுக்கரசு அடையாள தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

Similar News