செய்திகள்
வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 பேர் படுகாயம்
வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் முதலியார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (40) சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
வேதாரண்யம் - திருத்துறைப் பூண்டி சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது தேத்தாக்குடி தெற்கு பகுதியை சேர்ந்த சந்திர மவுலி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இதில் இருவரும் காயம் அடைந்தனர். வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் பின்னர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.