செய்திகள்
நாகை அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி
நாகை அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த வலிவலம் போலீஸ் சரகம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பிரசாத்(வயது 14). இவன் திருக்குவளை அரசு உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் இவன் நேற்று மதியுள்ளான் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது அவனை பாம்பு கடித்துள்ளது. உடனே அவனை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவன் பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.