செய்திகள்

சீர்காழியில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2016-11-20 15:40 IST   |   Update On 2016-11-20 15:40:00 IST
சீர்காழியில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சீர்காழி:

சீர்காழி இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். கோவில் பத்து என்ற இடத்தில் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக ஒரு வாலிபர் வந்தார்.

சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் முரளி என்கிற மாட்டு முரளி (31) பரங்கிப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவரிடம் விசாரித்த போது நேற்று சீர்காழி பைபாஸ் சாலையில் பழமங்கலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மயிலாடுதுறையை சேர்ந்த பாலமுருகனிடம் 2 விலையுயர்ந்த செல்போனை திருடியதை ஒத்துக் கொண்டார்.

மேலும் சீர்காழி ராஜேந்திரா நகரை சேர்ந்த சாகுல் அமீது வீட்டில் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு, செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து முரளியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News