செய்திகள்

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்

Published On 2016-11-19 17:24 IST   |   Update On 2016-11-19 17:24:00 IST
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (55). இவர் மருந்து மாத்திரைகள் வாங்க அண்டர்காடு மெயின்ரோட்டில் நடந்து சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து வேதாரண்யம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News