செய்திகள்

வேதாரண்யம் அருகே கடையில் தகராறு செய்த 4 பேர் கைது

Published On 2016-11-19 16:29 IST   |   Update On 2016-11-19 16:29:00 IST
வேதாரண்யம் அருகே கடையில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை சேர்ந்த மறைஞாயநல்லூர் உச்சக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). முன்னாள் ராணுவ வீரர். இவர் பூப்பெட்டி என்ற இடத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இவரது கடையில் அந்த பகுதியைச் சேர்ந்த 4 பேர் கடை வாசலில் பாட்டில்களை உடைத்தும், தரக்குறைவாக பேசியும், கடை ஊழியரையும் தாக்கினார்களாம். இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தம்பிரான் குடிகாடை சேர்ந்த வினோத் (22), ராஜசேகர் (28), மகேஷ் (31), சர்வகட்டளைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) ஆகிய நால்வரையும் கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Similar News