செய்திகள்

அய்யம்பேட்டை அருகே மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது

Published On 2016-11-18 16:05 IST   |   Update On 2016-11-18 16:05:00 IST
அய்யம்பேட்டை அருகே மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவையாறு:

அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரி புதுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பிரபாகரன் (26), இவர் சம்பவத்தன்று திருவையாறு பொன்னாவரை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி விரைந்து சென்று அனுமதியில்லாமல் மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த பிரபாகரனை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை கைப்பற்றினார்.

Similar News