செய்திகள்

பணபரிவர்த்தனை நடைபெற வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-11-14 17:29 IST   |   Update On 2016-11-14 17:29:00 IST
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர்:

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ரிசர்வ் வங்கி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வரவு செலவு கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கியில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த வந்தால் அதனை வாங்க முடியவில்லை. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பணத்தை கொடுக்க முடியவில்லை.

வங்கியில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பணபரிவர்த்தனையை தொடங்க அனுமதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

Similar News