செய்திகள்

சீர்காழியில் உழவர் பாதுகாப்பு அட்டைகள் எரிப்பு: குப்பையில் கிடந்ததால் பரபரப்பு

Published On 2016-11-11 17:23 IST   |   Update On 2016-11-11 17:23:00 IST
சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள குப்பை மேட்டில் தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை 1000-க்கும் மேற்பட்டவை எரிக்கப்பட்டு கிடந்தது.

சீர்காழி:

சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள குப்பை மேட்டில் தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை 1000-க்கும் மேற்பட்டவை எரிக்கப்பட்டு கிடந்தது.

இதனை அங்கு வந்த சிலர் பார்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இந்த அட்டை ஏன் எரிக்கப்பட்டு உள்ளது என்று வேதனை அடைந்தனர். மேலும் தங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கான அடையாள அட்டை ஏதேனும் எரிந்தது போக கிடக்கிறதா? என பார்த்து ஒருசிலர் அடையாள அட்டைகளை எடுத்து சென்றனர். விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய அடையாள அட்டை வழங்காமல் எரிப்பதற்கு என்ன காரணம் யார்? சொல்லி அடையாள அட்டைகள் எரிக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உரிய விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News