செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து

Published On 2016-11-01 18:07 IST   |   Update On 2016-11-01 18:07:00 IST
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் குத்திய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கேம்ப்-1 பகுதியை சேர்ந்தவர் ஜெய பிரேம் ஆனந்த் (வயது 32). இவருக்கும் தூத்துக்குடி பெரியசாமிநகரை சேர்ந்த மேகவர்ணம் என்பவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெய பிரேம் ஆனந்த் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த மேகவர்ணம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் சேர்ந்து ஜெய பிரேம் ஆனந்தை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகவர்ணம் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News