செய்திகள்

விருதுநகரில் பெண்ணை தாக்கி நகை பறிக்க முயற்சி

Published On 2016-11-01 14:10 IST   |   Update On 2016-11-01 14:10:00 IST
விருதுநகரில் பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் இ.முத்து லிங்காபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மனைவி சித்ரா (வயது34). இவர் இருசக்கர வாகனத்தில் சாத்தூர் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

விருதுநகர் பை-பாஸ் ரோட்டில் எட்டூர்வட்டம் விலக்கு பகுதியில் அவர் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா நகையை பிடித்து கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார். அதற்குள் அந்த நகை கவரிங் என்பதை அறிந்த கொள்ளையர்கள் சித்ராவை கீழே தள்ளி தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News