செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2016-10-31 17:02 IST   |   Update On 2016-10-31 17:02:00 IST
வடகிழக்கு பருவமழை காலதாமதமாக நேற்று தொடங்கியது.கடலூரில் மாவட்டத்தில் பரவலாக நேற்று மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்பசலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்தது. அதன்பிறகு மழை இல்லை.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலதாமதமாக நேற்று தொடங்கியது. கடலூரில் நேற்று இரவு முதல் மழை பெய்தது.

இதேபோல் பெண்ணாடம், திட்டக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. சம்பா பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மழையில்லாமல் கவலையில் இருந்தனர். இன்று பெய்யத் தொடங்கிய மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தின் மற்ற இடங்களான கீழசெருவாய், சிதம்பரம், அண்ணாமலைநகர், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, புவனகிரி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Similar News