செய்திகள்
கடலூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 5 மாடுகள் சாவு
கடலூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 5 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
கடலூர்:
தஞ்சையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், நள்ளிரவு 12.05 மணி அளவில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மீண்டும் 12.07 மணிக்கு புறப்பட்டது.
வசந்தராயன்பாளையம் என்ற இடத்தை சுமார் 12.10 மணியளவில் கடந்து செல்ல முயன்றபோது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே சில மாடுகள் ஓடி வந்தன. அவற்றின் மீது மோதாமல் இருப்பதற்காக ரெயிலின் வேகத்தை டிரைவர் குறைக்க முயன்றார்.
இருப்பினும் அந்த ரெயில் அங்கு வந்த மாடுகள் மீது ரெயில் வேகமாக மோதியது. இதில் ஒரு மாட்டின் உடல் ரெயில் என்ஜினில் சிக்கியதால் அந்த என்ஜின் பழுதானது. ரெயில் டிரைவர் கீழே இறங்கி வந்து பார்த்தபோது ரெயில் மோதி இதில் 5 மாடுகள் உடல் சிதறி செத்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கடலூர் முதுநகரில் உள்ள ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து என்ஜினில் சிக்கியிருந்த மாட்டின் உடலை அப்புறப்படுத்தினர். பின்னர், அந்த என்ஜின் பழுதை சீரமைத்தனர். இதன் காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.20 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.
அந்த வழியாக வரவேண்டிய ராமேஸ்வரம்-சென்னை, சென்னை-ராமேஸ்வரம், சென்னை-மன்னார்குடி, மன்னார்குடி-சென்னை, சென்னை-காரைக்கால், காரைக்கால்-சென்னை(கம்பன் எக்ஸ்பிரஸ்) ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், நள்ளிரவு 12.05 மணி அளவில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மீண்டும் 12.07 மணிக்கு புறப்பட்டது.
வசந்தராயன்பாளையம் என்ற இடத்தை சுமார் 12.10 மணியளவில் கடந்து செல்ல முயன்றபோது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே சில மாடுகள் ஓடி வந்தன. அவற்றின் மீது மோதாமல் இருப்பதற்காக ரெயிலின் வேகத்தை டிரைவர் குறைக்க முயன்றார்.
இருப்பினும் அந்த ரெயில் அங்கு வந்த மாடுகள் மீது ரெயில் வேகமாக மோதியது. இதில் ஒரு மாட்டின் உடல் ரெயில் என்ஜினில் சிக்கியதால் அந்த என்ஜின் பழுதானது. ரெயில் டிரைவர் கீழே இறங்கி வந்து பார்த்தபோது ரெயில் மோதி இதில் 5 மாடுகள் உடல் சிதறி செத்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கடலூர் முதுநகரில் உள்ள ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து என்ஜினில் சிக்கியிருந்த மாட்டின் உடலை அப்புறப்படுத்தினர். பின்னர், அந்த என்ஜின் பழுதை சீரமைத்தனர். இதன் காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.20 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.
அந்த வழியாக வரவேண்டிய ராமேஸ்வரம்-சென்னை, சென்னை-ராமேஸ்வரம், சென்னை-மன்னார்குடி, மன்னார்குடி-சென்னை, சென்னை-காரைக்கால், காரைக்கால்-சென்னை(கம்பன் எக்ஸ்பிரஸ்) ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.