செய்திகள்

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் தகவல்

Published On 2016-10-28 17:36 IST   |   Update On 2016-10-28 17:36:00 IST
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை:

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் 2015-2016-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டு மென சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலமான 27.10.2016 முதல் 31.10.2016 வரையுள்ள காலத்தில் பண்டிகை இல்லாத காலங்களில் இயல்பாக வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூல் செய்யப்பட வேண்டும்.

அதற்கு மாறாக கூடுதலாக கட்டணம் ஏதும் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.

இது தொடர்பாக 04575-240339 அல்லது கட்டணமில்லா தொலை பேசி 1077 ஆகிய தொலை பேசி எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Similar News