செய்திகள்

காளையார்கோவிலில் மருது சகோதரர் நினைவிடத்தில் குருபூஜை

Published On 2016-10-27 10:35 GMT   |   Update On 2016-10-27 10:35 GMT
காளையார்கோவிலில் மருது சகோதரர் நினை விடத்தில் குருபூஜை இன்று நடைபெற்றது. அங்குள்ள பெரியமருது சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

சிவகங்கை:

சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவிடம் காளையார் கோவிலில் உள்ளது. அங்கு இன்று (வியாழக்கிழமை) 215-வது ஆண்டு குருபூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி காலை 7 மணிக்கு கோவை சிவலிங்க சுவாமிகள் அங்கு பூஜையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பால்குட ஊர்வ லம் நடைபெற்றது.

இதில் மருதுபாண்டியர் களின் வாரிசுதாரர்கள், பல்வேறு சமூகத்தினர், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் பால் குடங்களை எடுத்து வந்தனர்.

ஊர்வலத்தின் முடிவில் பெரிய மருது சிலைக்கு பாலா பிஷேகம் செய்யப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந் தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச் சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News