செய்திகள்
கூட்டத்தில் டி.எஸ்.பி. சிலம்பரசன் பேசியபோது எடுத்த படம்.

கம்பெனி உரிமையாளர்கள் வடமாநில தொழிலாளர்களிடம் ஆவணங்களை பெற வேண்டும்: போலீசார் உத்தரவு

Published On 2016-10-26 15:07 IST   |   Update On 2016-10-26 15:07:00 IST
குற்றங்களை தடுக்க கம்பெனி உரிமையாளர்கள் வடமாநில தொழிலாளர்களிடம் ஆவணங்களை பெற வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரில் இருங்காட்டுகோட்டை சிப்காட், மாடம்பாக்கம் சிப்காட், ஒரகடம் சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்தர்களை தவிர ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணி செய்து வருகிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் குற்ற சம்பவங்கள் நிகழும் போது, வடமாநிலத்தார் கொலை செய்யப்பட்டாலோ அல்லது தீ விபத்தில் இறந்து போனாலோ அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது.

இதனை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் கம்பெனி நிர்வாகத்தினரிடம் கலந் தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கம்பெனி நிர்வாகத்தினர். பணி செய்யும் வடமாநில ஊழியர்களிடம் உரிய அடையாள ஆவணம் பெறுதல் வேண்டும். கம்பெனியில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமிரா கட்டாயம் பொருத்த வேண்டும்.

குற்றம் செய்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், இதுபற்றி கம்பெனி நிர்வாகத்தில் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணய்யன், குமார், அசோகன் மற்றும் கம்பெனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News