செய்திகள்
27-ந்தேதி காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 215-வது குருபூஜை விழா
காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 215-வது ஆண்டு குருபூஜை விழா திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.
சிவகங்கை:
காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 215-வது ஆண்டு குருபூஜை விழா திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.
இந்த ஆண்டு 4 தினங்கள் விழா கொண்டாடப்படு கிறது. நேற்று மாமன்னர் மருது சகோதரர்கள் நினை விடத்தில் 51 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடை பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பொங்கல் வைத்து வழிபாடு கிறார்கள்.
26-ம் தேதி காலை (புதன் கிழமை) மாலை வாண வேடிக்கை நடைபெறுகிறது. 27-ம் தேதி (வியாழக்கிழமை) குருபூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். காலை 7 மணி முதல் 11 மணி வரை பால்குடம் எடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்துகிறர்கள்.