செய்திகள்

சேலையூரில் தி.மு.க. மகளிர் அணி தலைவிக்கு அரிவாள் வெட்டு

Published On 2016-10-24 09:48 GMT   |   Update On 2016-10-24 09:48 GMT
சேலையூரில் தி.மு.க. மகளிர் அணி தலைவியை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்:

சேலையூர் அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகா தேவி (37). இவர் பரங்கிமலை ஒன்றிய தி.மு.க. மகளிர் அணி துணை தலைவியாக உள்ளார்.

இவர் இன்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

ரேணுகாதேவி மொபட்டை நிறுத்தினார். உடனே 3 பேரும் இறங்கி வந்து ஒரு முகவரியை ரேணுகா தேவியிடம் கேட்டனர். அவர் பதில் சொல்லி கொண்டு இருக்கும் போது 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் தலை, முகத்தில் வெட்டினர். அவர் அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

ரேணுகாதேவி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அவரை குடும்ப தகராறில் வெட்டினார்களா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறார்கள்.

Similar News