செய்திகள்
சேலையூரில் தி.மு.க. மகளிர் அணி தலைவிக்கு அரிவாள் வெட்டு
சேலையூரில் தி.மு.க. மகளிர் அணி தலைவியை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
சேலையூர் அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகா தேவி (37). இவர் பரங்கிமலை ஒன்றிய தி.மு.க. மகளிர் அணி துணை தலைவியாக உள்ளார்.
இவர் இன்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.
ரேணுகாதேவி மொபட்டை நிறுத்தினார். உடனே 3 பேரும் இறங்கி வந்து ஒரு முகவரியை ரேணுகா தேவியிடம் கேட்டனர். அவர் பதில் சொல்லி கொண்டு இருக்கும் போது 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் தலை, முகத்தில் வெட்டினர். அவர் அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
ரேணுகாதேவி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அவரை குடும்ப தகராறில் வெட்டினார்களா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறார்கள்.
சேலையூர் அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகா தேவி (37). இவர் பரங்கிமலை ஒன்றிய தி.மு.க. மகளிர் அணி துணை தலைவியாக உள்ளார்.
இவர் இன்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.
ரேணுகாதேவி மொபட்டை நிறுத்தினார். உடனே 3 பேரும் இறங்கி வந்து ஒரு முகவரியை ரேணுகா தேவியிடம் கேட்டனர். அவர் பதில் சொல்லி கொண்டு இருக்கும் போது 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் தலை, முகத்தில் வெட்டினர். அவர் அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
ரேணுகாதேவி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அவரை குடும்ப தகராறில் வெட்டினார்களா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறார்கள்.