செய்திகள்

திருப்பத்தூர் அருகே மின்னல் தாக்கி 8 ஆடுகள் பலி

Published On 2016-10-23 17:16 GMT   |   Update On 2016-10-23 17:16 GMT
திருப்பத்தூரில் நேற்று பலத்த சத்தத்துடன் இடியும்,மின்னலும் வெட்டின. அப்போது மின்னல் தாக்கியதில் மரத்தின் கீழ் ஒதுங்கிய 8 ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஒன்றியம் கே.வயிரவன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வயல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், செல்வராஜ், முருகேசன், செல்வம் ஆகியோரது ஆடுகள் கும்பலாக அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது பெய்த மழையால் ஒரு சில ஆடுகள் அருகில் இருந்த புளியமரத்தின் கீழ் ஒதுங்கி உள்ளது. அந்த நேரத்தில் வானத்தில் பலத்த சத்தத்துடன் இடியும், மின்னலும் வெட்டின. அப்போது மின்னல் தாக்கியதில் மரத்தின் கீழ் ஒதுங்கிய 8 ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது.

இதை சற்று தூரத்தில் இருந்து பார்த்த ஆடு மேய்ப்பவர் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து திருப்பத்தூர் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

Similar News